அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இனிய மாலை வணக்கம். சற்று நீண்ட இடைவெளி விழுந்து விட்டது தங்கள் வாசிப்புகள் இல்லாமல்….
மதம் பற்றியும் மதமாற்றம் பற்றியும் நம் மக்களுக்கு இன்னும் பல விசயங்களை நாம் விளக்கியாக வேண்டி உள்ளது. நம் இந்திய தேசத்தில் மதம் என்ற ஒன்றே உண்மையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ஏன் எனில் பரம்பொருளை அடைவதர்க்கான வழி இங்கே அனைவருக்கும் பொதுவாகத்தான் வழங்க பட்டு இருந்தது ஆரம்ப காலத்தில். நம் நாட்டிற்க்குள் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகமான போது தான் இந்து மரபு எங்கே மறைந்து போய் விடுமோ என்ற வீண் பயத்தில் உருவானது தான் பல சடங்குகளும் சம்ப்ரதாயங்களும். இதன் வளர்ச்சி இந்து மதம் என்பது வசதி படைத்தவன் கையில் ஆடும் பொம்மையாய் மாறி போனது.
தற்போதய நிலையில் ஒப்பிட்டு பார்த்தால் இந்து மதத்தை விட மற்ற மதங்கள் பொருளாதார கருத்து சுததந்திர நிலையில் வளர்ச்சி அடைந்த நிலையில் இருப்பது போல தெரியலாம். ஆனால் இந்து மதத்தில் நம்மை இறுக்கி பிடிக்கும் கட்டுபாடுகள் என ஒன்றை கூட எடுத்து காட்ட நம்மால் முடியாது. ஆனால் மாற்றங்கள உண்டு பண்ண முயற்சிக்கும் ஏனைய மதங்கள் அனைத்திலும் முதலில் இருக்கும் கனிவு இறுதி வரை இருக்குமா என நிச்சயம் கூற முடியாது.
பொருளாதாரம் தவிர்த்து அக வளர்ச்சி தான் தன்னுடைய தேவை என இருப்பவர்களுக்கு எந்த மதமும் தடை கல்லாக இருக்க முடியாது. ஆனால் தான் முதல் தேவை பொருளாதாரம் என இருப்பவ்ரக்ளுக்கு மாறும் மதம் ஒரு வேளை சிறைச்சாலை ஆக கூட மாறலாம்.
ஒன்று தேர்ந்தெடுபவர்கலுக்கு கவனம் வேண்டும், அல்லது அரசாங்கங்கள் இத்றக்கென ஒரு சரியான சட்ட முன்வடிவமாவது ஏற்படுத்தி தர வேண்டும்
இரண்டில் ஒன்றாவது நடைபெறாத வரை மதமும் மாறும் மதமும் நம்முடைய தீராத தலை வலியாக தான் இருக்கும்.
No comments:
Post a Comment