அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது.... வடிவேலு கூறுவது " இப்பவே கண்ண கட்டுதே.." ஆன்மீகம் நம் சராசரி நடுத்தர மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டு இருக்கும் விதமும் அதனை அரைகுறையாய் புரிந்து கொண்டு அவர்கள் படும் பாடும் அவர்கள் படுத்தும் பாடும் இதனை எளிமையாகவும் விலா நோக சிரிக்கும் வகையிலும் இதுவரை எழுத பட வில்லை என்றே நினைக்கிறேன்.
இப்படியே போனால் எங்கே இந்த கட்டுரை என்னை பற்றியும் எதாவது எழுதி விடுமோ என்று சற்று பயந்து தான் போனேன்.
ஆனால் நகைசுவை என்ற ஒன்றையும் தாண்டி இந்த கட்டுரை புரிய வைக்கும் அற்புதமான் விசயமாக நான் கருதுவது என்னவென்றால்... நாம் வெளிப்படுத்தி கொண்டு இருக்கும் பல கருத்துக்கள் நம்முடைய ஆழமான் புரிதல் இல்லாமலே வெளிவந்து கொண்டு இருக்கிறது என்பதை தான்,
எனக்கும் கூட கற்றவைகளை பற்றிய சில சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது இந்த கட்டுரை.
தொடர்ந்து இப்படியும் எழுதுங்கள்
பிரசன்னா
No comments:
Post a Comment