Sunday, May 16, 2010

நானும் மரமும்.........

நீ கடந்து போகையில் எல்லாம்

உன் மீது பூ சொரிந்த

அந்த பூவரச மரம்.....

நீ இல்லாத இந்த விடுமுறை நாட்களில்

ஏங்கி தானே போகும்

என்னை போல....

Wednesday, April 14, 2010

பண்பலைகள் படுத்தும் பாடு....

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இனிய காலை வணக்கம். சமீபமாக உங்கள எழுத்துகளில் நகைசுவை சற்று தூக்கலாக இருக்கிறதே… உங்களின் இந்த கட்டுரையை யாராவது வாசிக்க சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டு கேட்டால் அப்படியே ஒரு பண்பலை ஒலிபரப்பை நேரடியாக கேட்டது போலவே இருக்கும்.

தகவல் தொழிநுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய சூழ்நிலையில் பண்பலைகளின் பங்களிப்பை இன்று நாம் ஒதுக்கி விட முடியாது. பல சிறிய நிறுவனங்களின் விளம்பரங்களால் பலன் அளித்தும் பலன் அடைந்தும் கொண்டு இருக்கும் இது போன்ற பண்பலைகள் பல மாவட்டங்களில் வேருன்றி போய் இருக்கின்றன.

ஒரு நல்ல விளம்பரதாரர் எனவும் , ஒரு மிக சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும் இவர்களின் பணி பாராட்டுக்கு உரியது தான். ஆனால் அந்த மாவட்ட வட்டார வழக்கில் பேசுகிறேன் என இவர்கள் தமிழை படுத்தும் பாடு சொல்லி மாளாது.

ஒரு பாடலை விளம்பரங்களுக்கு இடையில் இவர்கள் போடுவதில் இருக்கும் ஆர்வம் அந்த பாடல் பற்றிய சரியான் தகவல்களை நேயர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் சிறிதும் இல்லை.

மதுரை பண்பலை ஒன்றில் நேற்று காலையில் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்கிறேன் என ஒரு தொகுப்பாளினி தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என சொல்கிறார். பொங்கல் அன்று என்ன வாழ்த்துகள் கூறுவார் என தெரியவில்லை.

பாரதியார் பிறந்த நாள் அன்று ஒருவர் பாரதியாருக்கே வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.

தமிழ் பற்றியும் தமிழ் பேச்சுக்கள் பற்றியும் சரியான விழிப்புணர்வு இல்லாத இவர்களின் குரல்களை கேட்டு தான் தமிழனின் பொன் காலை பொழுது விடிகிறது ….

என்ன செய்வது தமிழுக்கும் தமிழனுக்கும் வந்த நவீன சோதனை…..

மேற்சொன்ன அனைத்தையுமே உங்களின் இந்த கட்டுரை புட்டு புட்டு வைக்கிறது.



அன்புடன்

பிரசன்னா

Monday, April 12, 2010

நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீகம்...

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது.... வடிவேலு கூறுவது " இப்பவே கண்ண கட்டுதே.." ஆன்மீகம் நம் சராசரி நடுத்தர மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டு இருக்கும் விதமும் அதனை அரைகுறையாய் புரிந்து கொண்டு அவர்கள் படும் பாடும் அவர்கள் படுத்தும் பாடும் இதனை எளிமையாகவும் விலா நோக சிரிக்கும் வகையிலும் இதுவரை எழுத பட வில்லை என்றே நினைக்கிறேன்.

இப்படியே போனால் எங்கே இந்த கட்டுரை என்னை பற்றியும் எதாவது எழுதி விடுமோ என்று சற்று பயந்து தான் போனேன்.

ஆனால் நகைசுவை என்ற ஒன்றையும் தாண்டி இந்த கட்டுரை புரிய வைக்கும் அற்புதமான் விசயமாக நான் கருதுவது என்னவென்றால்... நாம் வெளிப்படுத்தி கொண்டு இருக்கும் பல கருத்துக்கள் நம்முடைய ஆழமான் புரிதல் இல்லாமலே வெளிவந்து கொண்டு இருக்கிறது என்பதை தான்,

எனக்கும் கூட கற்றவைகளை பற்றிய சில சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது இந்த கட்டுரை.



தொடர்ந்து இப்படியும் எழுதுங்கள்



பிரசன்னா

பயணம்....

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இட வசதி இன்மை என்ற நிலையில் இருந்து இன்று நாம் நம் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்புகளை அதிகம் பெற்றிருக்கும் போதும் இய்றக்கை உந்துதல்களை வெளிபடுதுகையில் நாம் காடும் மிக சின்ன கவனக்குறைவு கூட நாம் சார்ந்து இனம் பற்றிய ஒரு தவறான் பார்வையை மற்றவர்களின் கவனத்தில் ஏற்படுத்தி விடும் என்பதை உணர்த்தி உள்ளது அந்த தமிழன் பெற்ற அறை.

சில நேரங்கில் சில கடுமையான தண்டனைகள் தான் பல பெரிய இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பயணம் ஆழ்மனதில் ஏற்படுத்தும் அற்புதமான விசயங்களை கோர்வையாய் வெளிபடுதுதல் ஒரு கலை என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து கொண்டு இருக்கிறது கும்பமேளா.....

பகிர்ந்து கொண்டமைக்கும் பகிர இருப்பவைக்கும்  சேர்ந்த நன்றிகள்.



அன்புடன்

பிரசன்னா

Friday, April 9, 2010

மத மாற்றம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இனிய மாலை வணக்கம். சற்று நீண்ட இடைவெளி விழுந்து விட்டது தங்கள் வாசிப்புகள் இல்லாமல்….

மதம் பற்றியும் மதமாற்றம் பற்றியும் நம் மக்களுக்கு இன்னும் பல விசயங்களை நாம் விளக்கியாக வேண்டி உள்ளது. நம் இந்திய தேசத்தில் மதம் என்ற ஒன்றே உண்மையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ஏன் எனில் பரம்பொருளை அடைவதர்க்கான வழி இங்கே அனைவருக்கும் பொதுவாகத்தான் வழங்க பட்டு இருந்தது ஆரம்ப காலத்தில். நம் நாட்டிற்க்குள் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகமான போது தான் இந்து மரபு எங்கே மறைந்து போய் விடுமோ என்ற வீண் பயத்தில் உருவானது தான் பல சடங்குகளும் சம்ப்ரதாயங்களும். இதன் வளர்ச்சி இந்து மதம் என்பது வசதி படைத்தவன் கையில் ஆடும் பொம்மையாய் மாறி போனது.

தற்போதய நிலையில் ஒப்பிட்டு பார்த்தால் இந்து மதத்தை விட மற்ற மதங்கள் பொருளாதார கருத்து சுததந்திர நிலையில் வளர்ச்சி அடைந்த நிலையில் இருப்பது போல தெரியலாம். ஆனால் இந்து மதத்தில் நம்மை இறுக்கி பிடிக்கும் கட்டுபாடுகள் என ஒன்றை கூட எடுத்து காட்ட நம்மால் முடியாது. ஆனால் மாற்றங்கள உண்டு பண்ண முயற்சிக்கும் ஏனைய மதங்கள் அனைத்திலும் முதலில் இருக்கும் கனிவு இறுதி வரை இருக்குமா என நிச்சயம் கூற முடியாது.

பொருளாதாரம் தவிர்த்து அக வளர்ச்சி தான் தன்னுடைய தேவை என இருப்பவர்களுக்கு எந்த மதமும் தடை கல்லாக இருக்க முடியாது. ஆனால் தான் முதல் தேவை பொருளாதாரம் என இருப்பவ்ரக்ளுக்கு மாறும் மதம் ஒரு வேளை சிறைச்சாலை ஆக கூட மாறலாம்.

ஒன்று தேர்ந்தெடுபவர்கலுக்கு கவனம் வேண்டும், அல்லது அரசாங்கங்கள் இத்றக்கென ஒரு சரியான சட்ட முன்வடிவமாவது ஏற்படுத்தி தர வேண்டும்

இரண்டில் ஒன்றாவது நடைபெறாத வரை மதமும் மாறும் மதமும் நம்முடைய தீராத தலை வலியாக தான் இருக்கும்.

Saturday, March 27, 2010

பகவத் கீதை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இனிய மாலை வணக்கம் ஒன்றே கடவுள் என கூறும் இந்து மதம் அந்த கடவுளை அடையும் வழியாக கூறுபவை எல்லாம் தர்க்க அறிவிற்கு எட்டா கனியாகவே இருக்கிறது என்று தான் நினைத்து இருந்தேன். பொதுவாகவே தத்துவங்கள் எல்லாமே புரிந்து கொள்ள எளியன அல்ல என்ற கருத்து உண்டு.( எனக்கும் கூட)ஆனால் புரிதல் என்பது ஆழமான தேடலாக மாறும் போது எந்த வித கேள்விகளுமே இல்லாம புதிய தத்துவ உலகம் நமக்காக திறக்கும் என்பதை உங்களின் இந்த கட்டுரையின் ஆரம்பம் எனக்கு உணர்த்தி இருக்கிறது. ஆம். அர்ஜுனனின் தேடல் தான் முழுமையான கீதை. நானும் இது நாள் வரை கீதை என்பது புரிந்து கொள்ள தேவை இல்லாத மத நூல் என்று தான் நினைத்து இருந்தேன் ஆனால் இனிமேல் இதனை பிரபஞ்சத்தை உணர முற்படும் முயற்சிக்கு தேவையான் உந்து சக்தியாக பார்ப்பேன். உங்களின் மூலமாக கீதை எளிமையாக கிடைக்க போவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறன்.

தொடர்ந்த உங்களின் வாசிப்புகளுடன்

பிரசன்னா

Friday, March 26, 2010

அங்காடி தெரு- ஒரு கருத்தாக்கம்


அன்புள்ள ஜெயமோகனுக்கு,
இனிய மாலை வணக்கம். இந்த ‘அங்காடி தெரு” எனக்குள் ஒரு ஆழமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏன் என்றால் இந்த கதை நடைபெறுவதாக காட்டப்படும் டிநகர் ரெங்கநாதன தெருவை கடக்கும் போதெல்லாம் நினைத்து கொள்வேன்,( சென்னையில் இரண்டரை வருடம் இருந்த போது தினமும் ஒரு முறையாவது அந்த தெருவை கடக்க வேண்டிய சூழ்நிலை வந்து விடும்) எத்தனையோ பகுதிகளை வைத்து திரைப்படம் எடுக்கிறார்கள். இந்த தெருவில் ஒரு நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்கள் வியாபரம் செய்ய உதவி செய்யும் எத்தனையோ உயிர்களை பற்றி ஒரு படைப்பு ஏன் இன்னமும் வெளி வரவில்லை என நினைப்பேன். ஏன் எனில் அந்த அலங்காரங்களுக்கு மத்தியில்  வெளிபடுத்த  முடியாத எத்தனையோ இளம் நெஞ்சங்களின் சோகம் புதைந்து கிடக்கிறது. ஏக்கம், ஆசை, பாசம்,காதல் காமம் ,துரோகம் என ஒரு நல்ல இலக்கிய படைப்பிற்க்கான அத்தனை தளங்களும் அந்த தெருவில் இருந்து நம்மால் எடுக்க முடியும். இந்த அங்காடி தெரு பற்றிய முதல் அறிவிப்பு வந்ததில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறேன். இன்று மாலை காட்சியே சென்று விட வேண்டும் என நினைத்து இருந்தேன்.ஆனால் முடியாமல் போய் விட்டது. நிச்சயம் இரண்டொரு நாட்களில் பார்த்து விட்டு என் கருத்தாக்கங்களை பதிவு செய்கிறேன். ஒரு முறை என் நண்பர்  ஒருவரை பார்க்க வேண்டி இருந்ததன்  காரணமாக இந்த தெருவின் பிரம்மாண்ட கடைகளில் பணி புரியும் கடை கோடி ஊழியர்கள் தங்கும்  விடுதிக்கு செல்ல வேண்டி வந்த போது  மனம் மிகவும்  புண்பட்டு போனது  . பொருளாதாரம் ஒன்றின் காரணமாக வேர்விட்ட ஊரை தொலைத்து விட்டு  அங்கு வந்து பணி புரிந்து கொண்டு இருக்கும் உள்ளங்களின் வலி அவர்களின் முகங்களில் கண்டேன். அந்த நெஞ்சங்களின் தீராத மன சுமையை இந்த படம் சிறிதாவது ஆற்றும் என நம்புகிறன்.


மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
பிரசன்னா

Wednesday, March 10, 2010

அவள் பெயர் தமிழ் அரசி - ஒரு பார்வை


கடந்த ஞாயிறு அன்று தினமலர் மூலமாக கிடைத்த பரிசு டிக்கெட்டின் மூலமாக மதுரை அம்பிகா திரை அரங்கில் இந்த படத்தை பார்த்தேன். நான் சற்று தாமதமாக சென்ற காரனத்தால் நான் செல்லும் போதே படம் துவங்கி இருந்தது.
பால்ய காலத்தில் இருந்தே தன்னுடன் தீரா நட்பு கொண்ட தமிழ் அரசியிடம் தன மனதை தொலைத்து விட்டு , வாழ்க்கை எதிர் பாராமல் வீசி சென்ற ஒரு பானத்தால் நிலை குலைந்து போய் அவளை தொலைத்து விட்டு பின்னர் தேடி அடையும் ஒரு கிராமத்து வாலிபனின் கதை.
கதாநாயகனின் பயணம் என்றாலும் நாயகிக்கே முதல் இடம்.
தலையில் உணவு வேண்டும் கூடை ஏந்தி செல்லும் இடம் ஆகட்டும் , சிறு வயது நாயகன் பறவையை பற்றி அழகாய் ஒரு பெயர் கூறும் இடத்தில காட்டும் பாவனை ஆகட்டும் அந்த குழந்தை கதாநாயகி அத்தனை அழகு.
கள்ளம் கபடம் இல்லா கிராமத்து பெண்ணாய் வளர்ந்த நாயகி - நந்தகி . முதல் பரிசு வாங்கும் இடத்திலும் நாயகனை தேடுவது, தன்னை ஒதுக்க நாயகன் முற்படுகையில் துயரம் அடைவது, தன் மொத்த வாழ்க்கையும் பறி போய் விட்ட நிலையில் விட்டதை வெறித்து பார்ப்பது வரை ஒரு தேர்ந்த நாயகிக்கான அத்தனை அடையாளங்களும் ஒருமித்தநாயகி என கைதட்டும் வகையில் நடிப்பாற்றலை வெளிபடுத்துகிறார் . சபாஷ் நந்தகி
ஒரு கிராமத்து வாலிபனுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி கொண்டு இருக்கிறார் ஜெய் . அழுத்தமான இடங்களில் இன்னும் முகபாவனைகளில் சற்று கவனம் செலுத்தினால் நல்லது.
தோல்பாவை கூத்தை தனக்கே உரிய களமாய் எடுத்து ஆண்டுஇருக்கும் இயக்குனர் மீரா கதிரவனுக்கு சிறப்பான பாராட்டுக்கள்.
வளர்ந்து வரும் நாகரீகம் பண்டய கலைகளை படு குழிக்குள் தள்ளி விட்ட அவலம் கண் முன்னால் விரிந்து கண்களை குளமாக்குகிறது.
இளமை காலமாக விரியும் முதல் பாதி அழகாய் இருந்தாலும் இரண்டாம் பாதி சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். தனக்கு அருகில் பணத்தை பார்த்ததும் கதாநாயகி அடையும் துயரம் நம்மை சிறிதே பாதிக்கிறது. எப்படி இருந்தாலும் பாட்டி தாத்தா வீட்டிற்க்கு விடுமுறையில் சென்று வந்த அனுபவத்தை தரும் இந்த படைப்பை நிச்சயமாக பாராட்டித்தான் ஆக வேண்டும்.
அவள் பெயர் தமிழரசி---- ஒரு புதிய அனுபவம்

தொலைகாட்சி விளம்பரங்கள் ..?

அன்புள்ள ஜெயமோகன்,
இனிய மாலை வணக்கம். எனக்கு சமீப காலமாக தொலைகாட்சிகளில் அதிகரித்து வரும் ஒரு எண்ணம் சார்ந்த விளம்பரங்களை பார்க்கையில் மனம் பதறுகிறது. அவற்றுள் சில… கண்ணாடி போடுவது அழகுக்கு குறைவு என்பதால் லென்ஸ் பொருத்தி கொள்ள சொல்லும் விளம்பரம். ( அது குழந்தை என்றாலும் கூட..) MRI ஸ்கேன் போன்ற தீவிர நோய்களுக்கு குழந்தைகள் செல்ல வேண்டி இருக்கிறதே என்ற வருத்தம் சிறிதும் இல்லாமல் அதையும் அழகாக்கி இருக்கிறோம் என்ற பெருமிதத்தை வெளிபடுத்தும். விளம்பரம். குழந்தையின் காதுகளுக்கு முதலில் அறிமுகமாக வேண்டிய தாயின் குரல் தந்தையின் குரல் இவற்றை பற்றி கூறாமல் HOME THEATRE குரலால் குழந்தை ஆச்சர்யம் அடைவது போல காட்டுவது என நம்மை நம்முடைய இயல்பில் இருந்து பிய்த்து எடுத்து செல்ல முயற்சி செய்கிறதா இன்றைய விளம்பரங்கள். பொருளாதரத்தை அழிப்பது இல்லாமல் வாழ்க்கை பாதையே இந்த விளம்பரங்கள் மாற்றி விட்ம..?\\\
Prasanna

By Prasanna on Feb 28, 2010

தமிழரசனுக்கு பதில்....

அன்புள்ள தமிழரசனுக்கு,
அறிவுரை கூறுபவரின் யோக்கியதை என்ன என நாம் பார்க்க ஆரம்பித்தால் முதலில் தொலைவது நம் நிம்மதி தான். நம் இந்திய மக்களிடம் இருக்கும் மிக பெரிய துன்பம் தர கூடிய எண்ணம் என்ன வென்றால் தனக்கு பிடித்தமான நபரின் எல்லா செயல்களும் தனக்கு சாதகமாகவே இருக்க வேண்டும் என நினைப்பது. இது எத்தனை நூற்றண்டானாலும் சாத்தியமே ஆகாது. ( விளையாட்டு சினிமா குடும்பம் அலுவலகம் என எத்தகைய போராட்டம் ஆனாலும் அதற்கு பின்னணியில் நிச்சயம் இப்படி பட்ட சிந்தனை தான் இருக்கும்.) ஏன் என்றால் இந்த உலகின் ஒவொவொரு உயிரும் தனக்கே உரிய தனித்தன்மை கொண்டது. இது மற்றவரோடு பொருந்தி போனால்தான் துன்பம். சகித்து கொண்டு போவது எப்போதும் நீடிக்காது. புரிந்து கொள்வது தான் நிரந்தர தீர்வு என்பது என்னுடைய கருத்து. நித்தியானந்தா செய்தததை நான் ஞாயம் கூற வில்லை ஆனால் நிம்மதி என பார்க்கையில் தொலைந்ததன் சதவிகிதம் மக்களிடம் தான் அதிகம் இருக்கும் அவரை விட.
…… உங்களின் அதனை மகிழ்ச்சிக்கும் ஆணிவேர் உங்களிடம் தான் இருக்கிறது இதனை நிறைவேற்ற உங்களை விட யாரை நீங்கள் தேடினாலும் நிச்சயம் உங்களுக்கு மிஞ்ச போவது மிக பெரிய ஏமாற்றம் தான்…..
( இந்த சம்பவம் என்னை பொறுத்த வரை மற்றும் ஒன்று என்ற வகை தான் )
தவறுகள் ஏதேனும் இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்.

மீண்டும் சந்திப்போம்

பிரசன்னா

தமிழ் அரசனின் கேள்வி....

வணக்கம் பிரசன்னா …

யார் சொல்கிறார் என்பதை பார்கதே . சொல்வதை மட்டும் கேள் என்கிறீர்கள்.
எனக்கு என்னவோ கண்டிப்பாக சொல்பவனின் யோக்கிதத்தையும் , சொல்லப்படுவதையும் அளந்து பார்க்கவேண்டும் என்று படுகிறது. அவர் பல நூல்களையும் , தத்துவங்களையும் அறிந்து சொந்த சரக்கு எதையும் அதில் கலக்காது நமக்கு சொல்வதாக இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வது போல அவரை நடத்தலாம். ஆனால் அவ்வாறு சொல்வதற்கு எந்த ஒரு நிறுவனத்தையும் நிறுவத்தேவையில்லை. ஒரு புத்தகம் போட்டால் போதும்.

ஆனால் இவ்விசயத்தில் நித்யாவை அவ்வாறு நடத்தலாகத்து. உள்ளொளி பெறாத ஒருவர் சொல்லும் எல்லா விஷயங்களும் கட்டுக்கதைகளாகவே இருக்கும். ஏனென்றால் அவர் எதையும் அனுபவித்து சொல்லி இருப்பாரா என்று ஐயம் எழுகிறது. அவர் சொன்ன எதாவது ஒருவிசயம் உங்களுக்கு தெளிவை , நன்மையை அளித்திருக்குமையின் அது நீங்கள் எடுத்துக்கொண்ட சொந்த முயற்சியால் ,தேடலால் விழைந்தது..

-தமிழ்

By tamizharasan on Mar 4, 2010

ஆன்மீகம்- ஜெயமோகனிடம் கருத்து பரிமாற்றம்

அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். உங்களின் இந்த கடிதம் என்னை சற்று பிரம்மிப்பில் ஆழ்த்தி விட்டது. இலக்கியம் என்பது ஆன்மீகம் என்ற எல்லைக்குள் வராது என்று தான் இது நாள் வரை நினைத்து இருந்தேன். ஆனால் உங்களின் இந்த கட்டுரை என்னுள் பல மாறுதல்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விட்டது. நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. நம் மக்களுக்கு எப்போதுமே எதாவது அதிசயம் நிகழ வேண்டும். அதனை பெருமையாக பேச வேண்டும். அதில் ஒரு அங்கமாக மாற வேண்டும் அதனை நிகழ்த்துபவர் உலகின் கடவுளாக மாறி விட வேண்டும். இந்த பிம்பம் மக்களால் ஏற்றப்பட்டது. இப்போது மக்கின் கோபம் நித்தியானந்த சுவாமிகள் தவறு செய்ததால் ஏற்பட்டது அல்ல. தங்களின் போலியான நம்பிக்கை பாழ் பட்டு விட்டதே என்ற ஆத்திரம் தான். இங்கே வெளிப்பட்டு இருப்பது அவர்களின் அகங்காரம் தானே தவிர இங்கே எந்த கலாசாரமும் சீர்கெட்டு போக வில்லை. பிரபஞ்சத்தின் பரந்த வெளிகளுக்குள் தன்னை இணைத்து கொள்ள ஆசை இருப்பவன அதற்க்கான சாவியை வைத்து இருப்பவன் கையில் இருக்கும் சாவியை பற்றி தான் பார்க்க வேண்டுமே அன்றி அந்த சாவி இருக்கும் கை அழகாக இருக்கிறதா இல்லையா என பார்க்க கூடாது. இப்போது அது தான் நடந்து உள்ளது அவருடைய கருத்துகளுக்கு உண்மையிலேலே வலிமை அதிகம். மறுக்க முடியாது. முடிந்தால் அதனை பின்பற்றுவோம் இல்லையேல் ஒதுக்கி விட்டு நம் கடமையை செய்வோம். ஆனால் நம் மக்களால் இருக்க முடியாது. தான் உருவாக்கிய பிம்பம் அழியும் போது தான் மனிதனின் கீழான சொருபம் வெளிப்படும். இங்கே நடந்து கொண்டு இருக்கும் கூத்துகள் இனி வரும் காலத்திலும் தொடர தான் செய்யும். இவர்களை பாவம் அந்த ஆண்டவன் வந்தால் கூட காப்பாற்ற முடியாது.
பிரசன்னா

By Prasanna on Mar 4, 2010

ஜெயமோகனுக்கு பதில் கடிதம்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இனிய மாலை வணக்கம். எழுதும் ஆர்வம் இருக்கும் அனைவரும் சிறப்பாக எழுதி இருக்கிறோம் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தன்னை தானே சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டு பார்க்கையில் தான் தன்னுடை எழுத்தின் சாரமின்மை புலப்படும். சில நேரம் கவனத்துக்கு வரும். பல நேரங்களில் மறைந்து போகும். ஆனால் தன் எழுதுக்களை சீர் தூக்கி பார்க்கும் இந்த தன்மையும் உங்களை போல் விமர்சகர்களும் உடன் இருந்தால் ஆரம்ப நிலை எழுத்தாளர்களும் (என்னை போன்ற ) மிக சிறப்பாக எழுதலாம் என்பது என் நம்பிக்கை.
மேற்கண்ட உங்கள் கட்டுரையில் ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களை வைத்தே அவனின் அக வலிமையை ஆராயும் உங்கள் சிந்தனையும், குறைகளை பெருதுபடுத்தி ஒரு நல்ல எழுத்தாளனின் வளர்ச்சியை தடுத்து விட கூடாது என்ற எண்ணமும் பெரிதும் தென்படுகிறது.
உங்களின் எழுத்துக்களால் நாள் தோறும் கூர் தீட்ட பட்டு கொண்டு கொண்டு இருக்கும் பல நூறு பேரில் நானும் ஒருவன் என கூறுவதில் சற்று பெருமை தான்.

அன்புடன்
பிரசன்னா

Saturday, March 6, 2010

எது ஆன்மீகம்?

சமீப காலமாக அதிகரித்து வரும் பக்தி சிந்தனை, மக்களின் பயத்தின் வெளிபாடுதான் என்பதற்கு சரியான உதாரணம் தான் நித்தியானந்தா. மக்கள் ஆன்மீகம் என்ற பெயரில் நித்தியானந்தா மீது கட்டி வைத்து இருந்த கோட்டை சரிந்து போனதன் உதாரணம் தான் நித்தியானந்தா ஆசிரமங்கள் மீதான தாக்குதல்கள். எத்தனை நாட்கள் ஆனாலும் நம்முடைய போற்றினால் விண்ணை போலவும் தூற்றினால் இனி நம்மை மிஞ்ச யாரும் இருக்க கூடாது என்ற நிலையிலும் நடக்கும் செயல்கள் ஓயாது. மொத்தத்தில் பார்த்தால்மற்றவர்களை தூற்றி தூற்றி நம்முடைய நிம்மதி தான் நாளுக்கு நாள் தொலைந்து கொண்டு இருக்கிறது

Friday, March 5, 2010

அன்பு நண்பர்களுக்கு
வணக்கம்.தமிழ் எழுதுவது மிக இனிய ஒன்று . இனி என்னுடைய கருத்துக்கள் இங்கே தொடரும்